சர்க்கரை நோய்க்கான எளிய இயற்கை மருந்து:-------------------------------------( *உமிழ்நீர்! உயிர்நீர்!* )



சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.

உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்.

வாழ்வதற்காக  உண்டனர்!
உண்பதற்காக வாழ்ந்தனர்!

அதனால்தான்
 பொறுமையுடனும்,
 அமைதியுடனும், 
பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர். 
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

   உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால்,
கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை.

"தூண்டல், துலங்கல்"
என்ற விதியின் படி 
உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது.

நம் முன்னோர்கள்
நாட்களைக் கணக்கிட்டு,
மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்.

தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு,
நிமிடத்தைக் கணக்கிட்டு,
நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்.

அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.
உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை ' தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
உணவை ரசித்து, ருசித்து , உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல் , அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

 உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல் ,அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும் .

நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.

சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர் தான்.
எனவே
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்.

நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்.



இவண்
இயற்கை மருத்துவ ஆர்வலர்,
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்.
9943422906

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்