Posts

Showing posts from February, 2022

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய் — என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி என்னைப் புதிய வுயிராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து — மதி தன்னை மிகத்தெளிவு செய்து — என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.