காய்தல் - உவத்தலின்றி
பல நேரங்களில் நாம் கோபம் முதலான உணர்ச்சிகளுக்கு ஆளாகி விடுகிறோம். அதனால் என்ன, ஏது என்று அறியாமலேயே மற்றவர் மீது கோபம் கொண்டு நம் வார்த்தைகளை சிதற விடுகிறோம். நாம் வார்த்தைகளை வீனாக்கக் கூடாது. அது கடவுளுக்கு ஒப்பானது.ஒரு விஷயம் குறித்து நாம் ஒரு கருத்து கொண்டிருக்கலாம். மற்றவர் அந்த விஷயம் குறித்து வேறு ஒரு கருத்தினை நம்மிடம் சொல்லும்போது சடாரென்று உணர்ச்சிக்கு ஆளாகாமல் நண்பர் சொன்ன கருத்து, நாம் கொண்டிருக்கும் குறித்து ஆராய வேண்டும். எது சரியோ அந்த கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் காய்தல் உவத்தலின்றி அணுக வேண்டும். நல்லது என கண்டதை அச்சமின்றி எடுத்துக் கூற பழக வேண்டும்.