Posts

Showing posts from January, 2021

குற்றங்கடிதல் - குற்றம் தவிர்த்தல்

குறள்:431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. குறள் விளக்கம்: அகந்தை, கோபம், காமம் ஆகிய குற்றங்கள் இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம், மற்றவர் செல்வத்தைக் காட்டிலும் மேம்பட்டுத் தோன்றும் தன்மையுடையது.

திருக்குறள்

புகழ்புரிந்  தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. -  குறள் :  59 ,  அதிகாரம் :  வாழ்க்கைத் துணைநலம் , கிளை :  இல்லறவியல் ,  பிரிவு :  அறம் . புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள். - கலைஞர் மு. கருணாநிதி

அச்சமென்பதில்லையே!

  அருமையான காலை பொழுது. கதிரவனின் ஒளிக்கீற்றுகள் அந்த அடர்ந்த கானகத்தின் தரைப்பகுதியை அடையும் முயற்சியில் தோற்று நின்றன. அங்கு வாழும் அனைத்து உயிரினங்களும் தங்களது அன்றைய தினத்தை தொடங்கின.   அங்கு ஒரு அழகான பச்சைக் கிளி வாழ்ந்து வந்தது. அக்கிளிக்கு மூன்று பிள்ளைகள். முதலாமவன் பெயர் ராஜு. இரண்டாமவர் பெயர் சந்துரு. மூன்றாமவன் பெயர் சாமி. அந்த மூன்று பேரில் மூத்தவனான ராஜு மட்டும் மிகவும் பயந்தாங்கொள்ளியாக இருந்தது. தாய்க்கிளி எவ்வளவோ முயன்றும் ராஜுவின் பயத்தை மாற்ற முடியவில்லை.    ஒருநாள் அம்மா கிளி தன் பிள்ளைகளுக்கு பறக்க கற்றுக் கொடுத்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம்கிளிகள் பாடத்தைக் கற்று அழகாக பறக்க ஆரம்பித்தன.  முதல் கிளி மட்டும் முயற்சிக்கவே இல்லை. மரத்திலிருந்து கீழே குதித்து படபடவென்று உன் இறக்கைகளை அடித்து பறக்க முயற்சி செய். நீ பறந்து விடலாம் என்று தாய் சொன்னது.         "ஐயோ.... இல்லை.. இல்லை.... நான் கீழே விழுந்து விடுவேன். அதுமட்டுமல்ல, மேலே பறக்கும் போது காற்று அதிகம் வீசும். அதனால் தன் வேறு பக்கம் சென்று விழுந்து விடுவேன். மேலும் உயரத்தில் பருந்து, கழுகு எல்லாம் பறக்கும்.

காந்தங்கள்

 காந்தத்தைப் பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது. காந்தம் என்பது சுவாரஸ்யமான மற்றும் விசித்திரமான ஒரு பொருளாகும். காந்தங்கள்  பற்றிய சில உண்மைகளை இங்கு காண்போம். 1)காந்தத்திற்கு ஆங்கிலத்தில் magnet (மேக்னெட்) என்று பெயர். இது கிரேக்க சொல்லான 'மகனிசியேக்கல்' என்பதிலிருந்து வந்ததாகும். 2) காந்தத்திற்கு இரண்டு துருவங்கள் உள்ளது. அவை  வடதுருவம் மற்றும் தென் துருவமாகும். காந்தத்தை எத்தனை துண்டுகளாக வெட்டினாலும் அவை எல்லாவற்றுக்கும் வட மற்றும் தென் துருவங்கள் இருக்கும். 3) காந்தத்தின் வடதுருவப் எப்போதும் புவியின் வடதுருவத்தை நோக்கியே நிற்கும். 4) காந்தத்தைச் சுற்றி காந்த விசை பரவிஉள்ள பகுதியை காந்த புலம் என்பர். 5) ஒரு காந்தத்தின் வட துருவம் அருகில் மற்றொரு காந்தத்தின் வடதுருவப் தைக் கொண்டு சென்றால் அலைகள் ஒன்றையொன்று விலக்கும். வடதுருவப் தின் அருகே தென்துருவத்தைக் கொண்டு சென்றால் அவை ஒன்றுக்கொன்று ஈர்க்கும்.      இதையே காந்தத்தின் ஒத்த துருவங்கள் விலக்கும்,  எதிர்துருவங்கள் ஈர்க்கும் என்பர். 6) காந்தங்கள் இயற்கையில் கிடைப்பவை இயற்கை காந்தம்,  நம்மால் தயாரிக்கப்படுபவை  செயற்கை காந்தம்

நமது தேசிய நுண்ணுயிரி

 நம் நாட்டின் தேசிய விலங்கு, தேசிய பறவை, எல்லாம் நமக்குத் தெரியும். நம் நாட்டின் தேசிய நுண்ணுயிரி பற்றி தெரியுமா? என்னது தேசிய நுண்ணுயிரியா? ஆமாம் தேசிய நுண்ணுயிரி தான். அதுபற்றிய செய்தியைத் தான் இங்கு காணப்போகிறோம். நமது தேசிய நுண்ணுயிரி லாக்டோ பாசில்லஸ் பாக்டிரியா ஆகும். 2012 அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த பன்முகத்தன்மை பாதுகாப்பு மற்றும் கல்விக்கான சர்வதேச மாநாட்டில் லாக்டோ பாசில்லஸ் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டது. சில லாக்டோ பாசில்லஸ் பாக்டிரியாக்கள் தயிர், சீஸ், சார்க்ராட் (ஒரு வகை உணவு), ஊறுகாய், பீர், ஒயின், சைடர், கிம்ச்சி, கோகோ, பிற புளித்த உணவுகள், மற்றும் விலங்குகளின் தீவனம் போன்றவற்றின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது நுண்ணுயிரியாக இருந்தாலும் நமக்கு நன்மை செய்யும் வகையில் இயங்குவதால் தான் இதை தேசிய நுண்ணுயிரியாக அறிவித்தனர்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Image
இந்த தை மாதம்  நம் அனைவரின் வாழ்விலும் வளம் சேர்க்கட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

ஆங்கிலம் கற்போம்-2

வணக்கம் நண்பர்களே!  கடந்த பதிவில் வணக்கம் சொல்வது எப்படி என்று பார்த்தோம். இன்று நம் உறவுகளை ஆங்கிலத்தில் எப்படி கூப்பிடுவது என பார்ப்போம். நம் சொந்தங்கள் யாரென்று பார்த்தால்  அம்மா அப்பா தம்பி தங்கை தாத்தா பாட்டி மாமா அத்தை சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா        இந்த உறவுகளை நாம் ஆங்கிலத்தில் எப்படி சொல்வது என்று பார்ப்போம். அம்மா- Mother அப்பா- Father தம்பி-Brother தங்கை-Sister தாத்தா-Grand father பாட்டி- Grand mother மாமா-Uncle அத்தை-Aunty சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா         இந்த உறவுகள் எல்லாவற்றுக்கும்  ஆங்கிலத்தில் Uncle, Aunty தான்.      ஆகையால் நாமும் அவர்களை Uncle, Aunty என்றே கூப்பிடுவோம்.       சரி நண்பர்களே இன்று நாம் கற்ற இந்த பாடத்தினை வீட்டில் சொல்லிப் பாருங்கள். அடுத்த பாடத்தில் சந்திப்போம். நன்றி.

சலிம் மொய்சுதீன் அப்துல் அலி (பட்சி ராஜன்)

Image
சலிம் மொய்சுதீன் அப்துல் அலி ஒரு இந்திய பறவையியலாளர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார். "இந்தியாவின் பறவை மனிதன்" என்று அழைக்கப்படும் சலீம் அலி, இந்தியா முழுவதும் முறையான பறவைக் கணக்கெடுப்புகளை நடத்திய முதல் இந்தியர் ஆவார். மேலும் இந்தியாவில் பறவையியலை பிரபலப்படுத்திய பல பறவை புத்தகங்களை எழுதினார். அவர் 1947 க்குப் பிறகு பம்பாய் நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியின் ஒரு முக்கிய நபராக ஆனார். மேலும் தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமைப்புக்கு அரசாங்க ஆதரவைப் பெறுவதற்கும், பரத்பூர் பறவைகள் சரணாலயத்தை (கியோலாடியோ தேசிய பூங்கா) உருவாக்குவதற்கும், இப்போது சைலண்ட் வேலி தேசிய பூங்கா அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கும் பயன்படுத்தினார். சிட்னி தில்லன் ரிப்லியுடன் அவர் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் பறவைகளின் மைல்கல் பத்து தொகுதி கையேட்டை எழுதினார், அதன் இரண்டாவது பதிப்பு அவரது மரணத்திற்குப் பிறகு நிறைவடைந்தது. அவருக்கு 1958 இல் பத்ம பூஷண் மற்றும் 1976 இல் பத்ம விபூஷன் வழங்கப்பட்டது. சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் ந

வாட்ஸ் அப் வழியாக கல்வி

 கொரோணா ஊரடங்கு மார்ச் 27ல் ஆரம்பித்தது பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன என்னை ஆன்லைன் கிளாஸ் பக்கம் திருப்பியது ஆன்லைன் கிளாஸ்? அதற்கு ஸ்மார்ட் போன் வேண்டும்... இணைய இணைப்பு வேண்டும்.... ஆன்லைன் கிளாஸ் பற்றிய அறிவும் வேண்டும்...  என்ன செய்வது?  கூகுளில் ஆன்லைன் கிளாஸ் பற்றிய அறிவை தெரிந்து கொண்டேன். என்னிடம் ஸ்மார்ட் போன் உள்ளது. ஆனால் எனது மாணவர்கள் சில பேரிடமே ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன் உள்ளவர்களிடமும் இணைய இணைப்பு இல்லை. அதனால் என்ன? நான் வாட்ஸப் கிளாஸ் ஆரம்பித்தேன்.  வாட்ஸ்அப்பில் அந்தந்த வகுப்புகளுக்கு என ஒரு குழுவை உருவாக்கி அந்தந்த வகுப்புகளுக்கு தேவையான பாடங்களை ஸ்கிரீன் ரிக்கார்டிங் துறையுடன் உருவாக்கியும் யூடிப் காணொளிகளை பகிர்ந்தும் பாடத்திற்கு தொடர்புடைய பணித்தாள்களை அனுப்பியும் கூகுள் ஃபார்ம் வழியாகவும் ஆன்லைன் கிளாஸ் மூலம் மாணவர்களுக்கு புலனம் வழியாக கற்பித்தேன். சிலநாட்கள் சிறப்பாக சென்ற இந்நிகழ்வு பின் பெற்றோர்களிடம் பணம் போதாமையால் தடைப்பட்டுள்ளது.

ஆங்கிலம் கற்போம்

 தமிழ் நமது தாய் மொழி. அதனால் தமிழை நம்மால் சரளமாக பேசவும் எழுதவும் முடிகிறது. ஆனால் ஆங்கிலம் என்பது அப்படியல்ல. அது நம் தாய்மொழியல்ல. அதனால் அதை படிக்க சிறிது முயற்சி தேவை.  முயற்சி செய்தால் நமக்கு எல்லாம் முடியும். நம் முயற்சிக்கு அந்த வானமே எல்லை. இந்த பகுதியில் நாம் ஆங்கிலத்தை படிப்போம்.

நான் படிக்கும் போது

Image
நாணயங்கள் பற்றி படித்தேன். த.பிரகதீஷ் இரண்டாம் வகுப்பு ஊ.ஒ.தொ.பள்ளி குரூர் மரக்காணம் ஒன்றியம்

சர்க்கரை நோய்க்கான எளிய இயற்கை மருந்து:-------------------------------------( *உமிழ்நீர்! உயிர்நீர்!* )

சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்? உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து. உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர். வாழ்வதற்காக  உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்! அதனால்தான்  பொறுமையுடனும்,  அமைதியுடனும்,  பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்.  அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.    உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை. "தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி  உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர். தற்காலத்தில் நாம்

உலகப் பொது மறை

Image
திருக்குறள்  பாடல்கள் அனைத்துமே,  குறள் வெண்பா  என்னும்  வெண்பா  வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில், இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும், ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால், "குறள்" என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது. இது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இது  உலகப் பொதுமறை  என அழைக்கப்படுகிறது.