மதிப்பு தெரியாத மனிதர்கள்

ஒரு கதை 
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அந்த விவசாயி ஒரு முறை ஆற்றோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார் அப்போது பாதையில் மினுமினுப்பாக ஒரு வைரக்கல் கிடந்தது. அந்த வைரத்தின் மதிப்பை அறியாத அவர் அதனை தன் நண்பரிடம் காண்பித்துக் கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவன் விவசாயி கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,
நாற்பதாயிரம் ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..

ஆனால் விவசாயியோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 45 ஆயிரம் ரூபாய் கேட்டான்..

ஐந்து ஆயிரம் ரூபாய் அதிகம்
கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 40 ஆயிரம்
ரூபாய்க்கு பேரம் பேசினான்..

இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டு சென்றான்..

ஆத்திரமடைந்த வியாபாரி,
அந்த விவசாயியைப் பார்த்து, “அட
முட்டாளே! அதன் மதிப்பு பல இலட்சம் பெறும்... அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்..

அதற்கு விவசாயி, “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான்..
ஆனால் உனக்கு அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய
முட்டாள்” என்றான்..

நம்மில் சிலர் இப்படித்தான் நம் வாழ்க்கையின் உண்மையான மதிப்பு தெரிந்தும்,
கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்