கீழ்க்கண்ட பகுதியினைப் படித்து விடை எழுதுக
நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.
வினாக்கள்
1. வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன?
2. வாழைநார் எதற்குப் பயன்படுகிறது?
3. வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.
4. வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
5. பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக.
1) வேர்
ReplyDelete2) தண்டு
3) காய்
4) பழம்