இறையன்பு ஐயா அவர்களின் 'போர்த்தொழில் பழகு' என்கிற புத்தகத்திலிருந்து...
நண்பர்களுக்கு வணக்கம். நான் வாசித்த இறையன்பு ஐயா அவர்களின் 'போர்த்தொழில் பழகு' என்கிற புத்தகம் படித்தேன். அதிலிருந்து நமக்கான சில வரிகள் உங்களுடன்...
*துணியின்றி உடையும் துணிவின்றி படையும் சாத்தியமாகாது.
*வீரமற்ற புத்திசாலித்தனம் ஊமையாகும்.
*எது முந்துகிறது என்பதைப் பொறுத்தே வாழ்வதும் வீழ்வதும் வரையறுக்கப்படும்.
* துணிவும் வீரமும் கொண்டு ஆர்த்தெழாத சமூகம் எத்தனை மேதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அடிமைகளாகவே மடிய வேண்டியதுதான்.
*பயந்தாங்- கொள்ளியை தளபதிகளாக பெறும் மன்னர்கள் வாளைச் சுழற்ற எடுக்கும் பயிற்சியை விட, அதிக நேரத்தை வேகமாக ஓடும் முயற்சியில் செலவழிப்பார்கள்.
Comments
Post a Comment
Comment from message