தமிழர் வகுத்த காலம்

தமிழர்கள் ஓர் ஆண்டை கார்காலம்குளிர்காலம், ​முன்பனிக்காலம்பின்பனிக்காலம்இளவேனில்காலம்முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர்.

  • கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணிபுரட்டாசி யை உள்ளடக்கியது.
  • குளிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசிகார்த்திகை யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.
  • முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழிதை யை உள்ளடக்கியது.
  • பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசிபங்குனி யை உள்ளடக்கியது.
  • இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரைவைகாசி யை உள்ளடக்கியது.
  • முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனிஆடி யை உள்ளடக்கியது.

பண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான முல்லைகுறிஞ்சிமருதம்நெய்தல்பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை

Comments

Popular posts from this blog

English phrases

இராமன் விளைவு

தமிழர் முறை