மனதைக் கட்டிப்போடு; உடலுக்கு வேலை கொடு.
கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. அது மனதைக் கட்டிப்போடு; உடலுக்கு வேலை கொடு. அதன் படி நடந்ததாலேயே நம் முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆனால் இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம். நாம் பெரும்பாலான நேரங்களில் தொலைக்காட்சி மற்றும் ஆன்ட்ராய்டு தோலைபேசியில் நம் பொழுதைக் கழிப்பதன் மூலம் உடலைக் கட்டிப்போட்டு அதாவது உடலுக்கு ஓய்வு கொடுத்து விட்டோம். நாம் பார்க்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை யோசித்து, யோசித்தே நம் மனம் அலை கழிக்கப் படுகிறது.
ஆகவே நம் மனதைக் கட்டிப்போடுவோம். நம் உடலுக்கு தேவையான வேலை கொடுப்போம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
வாழ்க வளமுடன்
Long live prosperity!🏵️
Comments
Post a Comment
Comment from message