நம் வாழ்வை மாற்றும் பாடல்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே 
 ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே 

 ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே 
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே   

 நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் 
 லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் 

 மனமே ஓ மனமே நீ மாறிவிடு

 மலையோ அது பனியோ நீ மோதி விடு 
 
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது 

 என்ன இந்த வாழ்க்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது 

 எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்

  காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள் 

 உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் 

 வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்

      யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் 

 ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்

  மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு
 
                            படம்-ஆட்டோகிராப் 
                             பாடல்-திரு.பா.விஜய் 
                            இசை-திரு.பரத்வாஜ்
இப்படியொரு அற்புதமான பாடலை எழுதிய திரு பா. விஜய், இசையமைத்த திரு.பரத்வாஜ், படத்தை அழகாக இயக்கிய திரு சேரன் ஆகிய மூவருக்கும் வாழ்த்துகள் .

Comments

Popular posts from this blog

English phrases

இராமன் விளைவு

தமிழர் முறை